Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் அறம் மக்கள் நலச்சங்கம் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதோடு, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாநகரில் மிக பெரிய அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்துகிறது.
அறம் மக்கள் நலச்சங்க தலைவர் சு.ராஜா மற்றும் பொதுச் செயலாளர் சு.ரமேஷ்குமார் இவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனியரசு எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
முன்னதாக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.